கடந்த ஆட்சியில் நட்டத்தில் இயங்கிய கைத்தறி துறையில் ரூ.20 கோடி லாபம் அமைச்சர் காந்தி தகவல்

viduthalai
1 Min Read

திருச்சி, டிச. 28- அதிமுக ஆட்சியில் ந;lடத்தில் இயங்கிய கைத்தறி துறை திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு லாபத்தில் இயங்கி வருகிறது என்று– கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகரம் தில்லை நகர் மக்கள் மன்றத்தில் கைத்தறி பொருட்கள் விற்பனை கண் காட்சியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து அங்கு விற்பனையை தொடக்கி வைத்தனர். அதனை அடுத்து கண்காட்சியை அவர்கள் பார்வையிட்டனர்.

கைத்தறி கண்காட்சி

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, தமிழ்நாட்டில் கைத்தறி பொருட்கள் விற்பனை கண்காட்சியை நான்கு மாவட்டங்களில் நடத்துகிறோம்.

அதில் திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்த கண்காட்சி ஜனவரி 10ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் ஒரு கோடி முதல் 2 கோடி வரை விற்பனை நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக விற்பனை நடக்கும் என நம்புகிறோம்.

கைத்தறித்துறைக்கு கலைஞரும் – அண்ணாவும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தந்தார்களோ அதே போல தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

கடந்த ஆட்சியில் இந்த துறை மிகவும் நட்டத்தில் இயங்கியது. கிட்டத்தட்ட ஏழு கோடி வரை இந்தத் துறை நட்டத்தில் இயங்கியது தற்போது அந்த நிலை மாறி கைத்தறி துறையை லாபத்தில் இயக்கி வருகிறோம்.

சென்ற ஆண்டு வரை மட்டும் 20 கோடி ரூபாய் லாபம் இந்த துறையில் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்த துறையிலும் சில பிரச்சனைகள் உள்ளது என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *