சமஸ்கிருதம் இல்லை என்றால் ‘திராவிடம்’ இல்லையா?

1 Min Read

கேள்வி: திராவிடம் இல்லை என்றால் ஸம்ஸ்கிருதமும், ஹிந்தியும் தமிழை அழித்திருக்கும் என்கிறாரே திருமாவளவன்?
பதில்: ஸம்ஸ்கிருதம் இல்லை என்றால் திராவிடம் என்ற வார்த்தையே இருந்திருக்காது என்பது திருமாவளவனுக்குத் தெரியாது. அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. 1962இல் பிறந்த அவர் தி.மு.க. கால கல்வியைத்தானே பயின்றார். (‘துக்ளக்’ 27.11.2024 பக்கம் 27)
முதலில் சமஸ்கிருதம் என்பது ஒரு தனி மொழியே இல்லை என்பது நினைவில் இருக்கட்டும். பழங்காலத்தில் பலர் பலவிதமாகப் பேசி வந்த மொழிகளிலிருந்து சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு கலவை.
சமஸ்த்தம் + கிருதம்
சமஸ்த்தம் = யாவும்
கிருதம் = சேர்த்துச் செய்தது
என்று பொருள்.
இந்த யோக்கியதையில் உள்ள ஸம்ஸ்கிருதம் இல்லை என்றால் திராவிடம் என்ற வார்த்தையே இருந்திருக்காது என்கிறார் ‘துக்ளக்’ குருமூர்த்தி. அய்யர் ஆயிற்றே – அப்படித்தானே எழுதுவார்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *