வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்!

Viduthalai
2 Min Read

16 ஆவது நிதி ஆணையக்குழுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை, நவ.18 வரி வருவாயில் 50 சதவீதம் மாநி லங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று 16 ஆவது நிதி ஆணையக்குழுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார்.
சென்னை கிண்டியில் 16 ஆவது நிதி ஆணை யக்குழுவினரை இன்று (18.11.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நிதி ஆணையக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
வரி வருவாயில் தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு சதவீதம் குறித்து ஒன்றிய நிதி ஆணையக்குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:

* கூட்டாட்சி தத்துவத்தைப் பயன்படுத்தி மாநிலங்கள் தங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன.
* 15 ஆவது நிதி ஆணைய குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 41 சதவீதமாக உயர்த்தியதை வரவேற்கிறோம்.
* முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கியம் ஆகும்.
* தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
* சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்குத் தேவையான நிதியை அளிப்பதன் மூலம் வளர்ச்சி யைத் தக்க வைக்கலாம்.
* தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்ல வரி பகிர்வை மாற்றி அமைக்க வேண்டும்.
* இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தால் தமிழ்நாடு பெரும் பேரழிவைச் சந்தித்து வருகிறது.
* அறிவிப்பிற்கு மாறாக 31 சதவீத வரி வருவாய் மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* ஒன்றிய அரசு அளிக்கும் வரி வருவாய் குறைவதால் மாநில அரசுகளுக்குப் பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.
* வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
* வளர்ந்த மாநிலங்களைப் பாதிக்காத வகையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு உரிய நிதி தர வேண்டும்.
* முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு நிதி வழங்க வேண்டும்.
* மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 50 சதவீத மாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *