சண்டிகார், நவ.12 அரியானா மாநிலம் குருகிராம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
அண்மையில் அரியானா மாநி லம், குருகிராம் மாவட்டத்தில் நடை பெற்ற தேசிய காவலர் தினத்தில் காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக குருகிராம் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறவிகள் சிலர் பஜனை பாடல்களைப் பாடினர். அப்போது காவல்துறை அதிகாரிகள் சிலர் துறவிகளின் பஜனையை கைதட்டி ரசித்துப் பார்த்தனர். இந்தக் காட்சிப் பதிவு இணையத்தில் வெளியானதை அடுத்து இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது அரியானாவில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அனைத்துத் துறை களையும் காவிமயமாக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒருபக்கம் பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகளை அடித்துக் கொலை செய்யும் கொடூரம்! இதில் பசுப் பாதுகாவலர்களையும் காவல்துறையினர் அழைத்துக்கொண்டு சுற்றி (ரோந்து) வருகின்றனர். குற்றச்செயல்களுக்கு காவல்துறை யினரே ஊக்கம் கொடுத்து வரு கின்றனர். மற்றோரு பக்கம் வர்ணாஸ்ரமம் தான் இந்தியாவின் கொள்கையாக இருக்கவேண்டும் என்று கூறிக்கொள்ளும் இஸ்கான் அமைப்பினரை தலைமைக்காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து பஜனைப் பாட அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல், உயரதிகாரிகளும் அவர்களோடு சேர்ந்து பஜனை பாடுகிறார்கள்.
“அவசர தேவைக்கு 100–க்கு’’ அழைத்தால் காவல்துறையினர் பஜனைப் பாடலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.