ராஜஸ்தானில் கல்லூரி சுவர்களை காவிமயமாக்குவதாக குற்றச்சாட்டு

1 Min Read

ஜெய்ப்பூர், நவ.11 ராஜஸ்தானில் கல்லூரி சுவர்களுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில்,காயகல்ப் திட்டத்தின் கீழ் 20 அரசு கல்லுாரிகளின் கட்டிடங்கள், நுழையும் பகுதிகளில் உள்ள அறை ஆகியவற்றில் ஆரஞ்சு வண்ணம் பூச வேண்டும் என்று மாநில கல்லுாரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 20 கல்லுாரிகளில் ஆரஞ்சு நிறம் பூசப்பட உள்ளது என கல்லுாரி கல்வி இயக்குனரக அதிகாரி தெரிவித்தார். கல்லூரிகளுக்கு ஆரஞ்சு நிறம் பூசுவது கல்வியை காவிமயமாக்க பாஜ அரசு செய்யும் முயற்சி என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *