இந்தியாவின் வேலையின்மை விகிதம் 5.5 சதவிகிதமாக அதிகரிப்பு

1 Min Read

புதுடில்லி, ஜூன் 19 இந்தியாவின் வேலையின்மை விகிதம் 11 மாதங்களில் இல்லாத வகையில் 5.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம்  வெளியிட்ட காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்  சமீபத்திய மாதாந்திர அறிக்கையின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதமானது ஏப்ரல் மாதம் 5.2 சதவீதத்திலிருந்தது. அது மே மாதத்தில் 5.5 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும் அதே வேளையில், தொழிலாளர்கள் பங்கேற் பும் (வேலை கிடைக்கும் அளவு) குறைந் துள்ளது. இது தொழிலாளர் சந்தை சுணக்க மடைவதைக் காட்டுகிறது என பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிராமப்புறங்களில் தொழிலாளர் படை பங்களிப்பு விகிதம்  ஏப்ரல் மாதத்தில் 57.5 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 56.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. நகர்ப் புறங்களில் இது 50.1 சதவீதத்திலிருந்து 49.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.அதாவது வேலை செய்யத் தகுதியுள்ள மக்களில் பலர், வேலை தேடுவதையே தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள் அல்லது வேலைச் சந்தையிலிருந்து வெளியேறிவிட்டார்கள் என தெரிய வந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *