ஏழைகள் வீட்டிற்கு மோடி என்றுமே சென்றதில்லை அவர் செல்வது எல்லாம் அதானி, அம்பானியின் இல்ல விழாக்களுக்கு மட்டுமே ராகுல்காந்தி உரை

viduthalai
1 Min Read

ராஞ்சி, நவ.10 ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பக்மாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலை வரும் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.:

“ஏழைகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் பிரதமர் நரேந்திர மோடி செல்வதில்லை. அவர் எந்த ஒரு ஏழையின் திருமணத்துக்கும் சென்றதில்லை. ஆனால், அம்பானி இல்ல திருமணத்துக்கு சென்றுள்ளார்.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் தாய்மார்களும், சகோதரிகளும் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். நரேந்திர மோடி அனைத்தையும் ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வந்துள்ளார். நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் வழியாகவே முழு வரிக் கட்டமைப்பும் உள்ளது”என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *