‘சுயமரியாதைச் சுடரொளி’ மானமிகு ஆர். தருமராசன் 36ஆம் ஆண்டு நினைவு நாள்

viduthalai
1 Min Read

தந்தை பெரியார் கொள்கையின்பால் இளமைமுதல் ஈர்க்கப்பட்டவரும், S.R.M.U. தென் பகுதி ரயில்வேமென் யூனியன் என்ற திராவிடர் கழகத்தின் இரயில்வே தொழிற்சங்கத்தின் வளர்ச்சிக்கும், செயல்பாடுகளுக்கும் முக்கிய கிரியா ஊக்கியாக இருந்தவரும், இரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியார் கொள்கை வழி ‘சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு’ எனும் நெறியில் தம் வாழ்க்கைப் பாதையை அமைத்து பிள்ளைகளை எல்லாம் கல்வி ஏணியில் மேலே உயர்த்திய பெருமகனாருமான மானமிகு
ஆர். தருமராசன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளில் (8.11.1988) அவர்தம் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய செல்வர்கள் டாக்டர்
த. தமிழ்மணி (MD, DGO), மறைந்த த. ராஜேந்திரன் (B.S. Agri.) அவர்களின் புதல்வர்கள் டாக்டர் ஆர். அன்பு, டாக்டர் ஆர். மலர், த. வீரசேகரன் (B.A.,B.L.,), த.சித்தார்த்தன் (B.A., B.L.,), டாக்டர் த. அருமைக்கண்ணு (MBBS, D.A), ஆகியோர் நன்றி உணர்வுடன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ. ஒரு லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *