பாட்னா, நவ.6 பொதுவெளியில் பாஜக தலைவரின் காலை தொட்டு வணங்கிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலுக்கு ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று (5.11.2024) கடும் கண்டனம் தெரிவித்தார்.
பீகாரில் நடைபெற்ற சித்திரகுப்தா பூஜையில் பாஜகவின் மூத்த தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.கே. சின்ஹா பங்கேற்றார். அப்போது, பொது வெளியில் அவரின் காலைத் தொட்டு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வணங்கினார். இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, பொதுவெளியில் பாஜக தலைவரின் காலைத் தொட்டு வணங்கிய நிதிஷ் குமாரின் செயலுக்கு லாலு பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், மக்களின் காலைத் தொடும் பழக்கத்தை கொண்டவர் என நிதிஷை அவர் விமர்சித்துள்ளார்.
நிதிஷ் குமார் இதுபோன்று பொதுவெளியில் காலில் விழுந்து வணங்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பு, பல தருணங்களில் பிரதமர் மோடியின் காலில் விழுந்து நிதிஷ் குமார் வணங்கியுள்ளார்.கடந்த ஜூன் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. அப்போது, நிதிஷ் குமார் என்டிஏ கூட்டணியில் இணைந்தது குறித்து பிரதமர் வெகுவாக பாராட்டி பேசினார். அந்த நிகழ்வில், பிரதமரின் காலைத் தொட நிதிஷ் முயன்ற காட்சிகளும் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக இருவா் நியமனம்
சென்னை, நவ.6 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக 2 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தாக்கா் வெளியிட்டுள்ளார்.
அவரது உத்தரவு: அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக 2 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தாக்கா் வெளியிட்டுள்ளார்.
அவரது உத்தரவு: மூத்த வழக்குரைஞா்களான கே.சந்திரமோகன், எம்.சுரேஷ் குமார் ஆகியோர் சென்னை உயா்நீதிமன்றத்தின் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். நீதித் துறை அலுவலா்களை நியமிப்பது தொடா் பான விதிமுறைகளின் கீழ், இவ்விருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.