34 ஆண்டுக்குப் பின் யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி சாலை திறப்பு : இலங்கை அதிபர் உத்தரவு

2 Min Read

ராமேசுவரம், நவ.2- இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான சாலையை 34 ஆண்டுகள் கழித்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க நேற்று (2.11.2024)உத்தரவிட்டார்.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பலாலி – அச்சுவேலி இடையேயான பிரதான சாலை கடந்த 1990ம் ஆண்டி லிருந்து இலங்கை ராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர், இராணுவம் கையகப்படுத்திய இந்த சாலையை பொது மக்களின் உபயோகத்திற்காக மீண்டும் திறக்க வேண்டும் என்பது யாழ்ப்பாணம் மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் 34 ஆண்டுகள் கழித்து யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான சாலை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

இது குறித்து இலங்கையின் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த மூன்று தலைமுறைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான சாலை வெள்ளிக்கிழமை திறப்படுகிறது. உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இந்த பிரதான சாலை மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. இந்த சாலையை திறப்பது தொடர்பாக வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் 22 அன்று அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன், இலங்கை ஆளுநர்கள் சந்திப்பின்போது, வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் இந்த சாலையை திறக்க அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, இந்த சாலையை திறப்பது தொடர்பாக பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த சாலையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திறக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி சாலை பிரதான சாலையின் இரு பக்கங்களிலும், மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும், அந்த சாலையோரங்களில் உள்ள ஆலயங்களில் வழிபாடு செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *