திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டண விவகாரத்தில், பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. வழிபாட்டிற்கு ரூ.1,000, 2,000 என வாங்கினால் ஏழைகள் எப்படி வழிபாடு செய்வார்கள் எனவும், ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா எனவும் நீதிபதிகள் வினவியுள்ளனர். மேலும், அறநிலையத்துறை ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தர விட்டுள்ளனர்.