விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பிஜேபி காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

1 Min Read

புதுடில்லி, அக்.23- விவ சாயிகளின் மிகப்பெரிய எதிரி பா. ஜனதா. அக்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற மராட்டிய மாநிலம் முடிவு செய்து விட்டது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

பா.ஜனதா ஆட்சி நடக்கும் மராட்டிய மாநிலத்தில், அடுத்த மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப் பெரிய எதிரி, பா.ஜனதாதான். அங்கு 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயத் துக்கான நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டு விட்டது. மராட்டிய மாநிலத்தை வறட்சியற்ற மாநிலம் ஆக்குவோம் என்ற வாக்குறுதி, வெற்று முழக்கமாகி விட்டது.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு பா.ஜனதா அரசு ரூ.8 ஆயிரம் கோடி வழங்கி வருகிறது. ஆனால், விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க மறுத்துவிட்டது.
வெங்காயம், சோயாபீன் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டதால், அவற்றை விளைவிக்கும் விவசாயிகள் ஏற்றுமதி வரி சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தி, கரும்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் சிக்கலில் உள்ளன. அதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தநிலையில், பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசை அகற்றினால்தான் விவசாயிகளுக்கு நன்மை விளையும் என்று மராட்டிய மாநிலம் முடிவு செய்து விட்டது. ‘மகாபரிவர்த்தன்’ என்ற காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எந்தச் சிக்கலும் இல்லை!

இந்தியா

உ.பி.,யில் இடைத்தேர்தல் நடக்க உள்ள சில சட்ட மன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள் ளோம். ஆனாலும், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். இதனால், ‘இந்தியா’ கூட்டணிக்கு எந்த சிக்கலும் இல்லை.

– அகிலேஷ், தலைவர், சமாஜ்வாதி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *