சென்னை, நவ.17 நியாயவிலை கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என் றும் சண்டையிடக்கூடாது என்றும் நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. நியாய விலை கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுப்புறத்தை தூய்மை யாக பராமரிக்க வேண்டும் என்றும் நியாய விலை கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் கனி வோடு, மரியாதையாக, கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது : ஊழியர்களுக்கு கட்டளை
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books