தருமபுரி, அக். 7- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநா டிக்கு 17 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித் துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை அளவீட்டின்போது நீர் வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இந்நிலையில், நேற்று (6.10.2024) காலை நீர்வரத்து விநாடிக்கு 17ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலையிலும் நீர்வரத்தில் மாற்ற மின்றி, விநாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக நீடித்தது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித் துள்ளதாலும், நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதாலும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்படுகிறது” என்று அறிவித்துள்ளார். மேட்டூர் அணைக்கு… இதுபோல, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு கடந்த 3ஆம் தேதி விநாடிக்கு 7,153 கன அடியாகவும், 4ஆம் தேதி 6,416 கன அடியாகவும், நேற்று முன்தினம் (5.10.2024) 8,268 கனஅடியாகவும் நீர்வரத்து இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை நீர் வரத்து விநாடிக்கு 12,713 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 92.60 அடியாகவும், நீர் இருப்பு 55.67 டிஎம்சியாகவும் இருந்தது.