இந்திய அளவில் பாரம்பரிய சுற்றுலாத் தலமாக கீழடி தேர்வு

1 Min Read

மதுரை, செப். 30–- இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இந்திய குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் உலக சுற்றுலா நாள் கொண்டா டப்பட்டது.டில்லியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைப்புகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலம் எனும் தலைப்பில் கீழடிக்கு விருது வழங்கப்பட்டது.

சிந்து, கங்கை நதிக்கரை நாகரிகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரிகங்கள், தமிழ் நாட்டில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய், சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
வைகை நதியின் தென் கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண் டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
சங்க இலக்கியப் பாடல் களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய் வாளா் களும், சங்கத்தமிழ் ஆா்வலா் களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

சங்ககாலத்தில் கட்ட டங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட் டுள்ள கட்டடங்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் இது வரை நடைபெற்ற அகழ்வாராய்ச் சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை. இவ்வளவு பெருமைக் குரிய கீழடி இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக தேர்வா கியிருப்பது உலகத் தமிழர் கள் அனைவருக்கும் பெருமையான தருணம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *