குஜராத்தில் ஆலைகளை அமைக்க நிறுவனங்களை மிரட்டுவதா? கருநாடக அமைச்சர் குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

புதுடில்லி, செப். 27- குஜராத்தில் முதலீடு செய்து ஆலை அமைக்குமாறு செமிகண்டக்டர் நிறுவனங்கள் மிரட்டப்படுவதாக, கருநாடக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், மாநிலங்கள் இடையே சமமான போட்டி வாய்ப்பு நிலை இல்லை. செமிகண்டக்டர் நிறுவனங்கள் ஆலை அமைக்க, கருநாடகாவும், தமிழ்நாடும் சாதகமான மாநிலங்களாக உள்ளன. ஆனால், எந்த நிறுவனமும் இந்த இரண்டு மாநிலங்களுக்கு வரவில்லை. குஜராத்தில் முதலீடு செய்யுமாறு நிறுவனங்கள் மிரட்டப்படுவதாக, வெளிப்படையாக குற்றஞ்சாட்டுகிறேன்.

உள்நாட்டுக்கு மட்டுமின்றி; உலகளாவிய தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு, தொழில் கொள்கைகளும் துடிப்பான சூழலும் கருநாடகாவில் உள்ளன. செமி கண்டக்டர்களுக்கான திறனும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யங்களும் சிறப்பாக இருக்கும் நிலையில், நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்யாதது ஏன் என, ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *