சென்னை, செப். 23- சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தில் 18.09.2024 அன்று பாவேந்தர் பாரதி தாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர் சொற்பொழிவு வரிசையில் 3ஆம் சொற் பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிறுவன முதுகலை மாணவி சி.கயல்விழி வரவேற்புரை வழங்கினார். நிறுவன இயக்குநர் (கூ.பொ.), கோபிநாத் ஸ்டாலின் தலைமையுரையாற்றினார். நிறுவன உதவிப் பேராசிரியரும் ஆய் விருக்கைப் பொறுப்பாளருமான முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் நோக்கவுரை யாற்றினார்.
திமுக, மாநிலச் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் “பாரதிதாசன் – வரலாற்றின் வழக்குரைஞர்” எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவி மி.பிறைலின் டின்சியா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிட, நிறுவன மாணவர் வி.விஜய் நன்றியுரை ஆற்றினார். இவ்விழா வில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரி யர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.