சென்னை, செப்.17 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2024) சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மாலை அணிவித்து, பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ச.இன்பக்கனி, சே.மெ.மதிவதனி மற்றும் மகளிரணி, இளைஞரணி தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள்: கழகத் துணைத் தலைவரின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
