அரியானா பேரவை முன்கூட்டியே கலைப்பு ஆளுநா் நடவடிக்கை

Viduthalai
1 Min Read

சண்டிகர், செப்.13 அரி யானாவில் முதலமைச்சர் நாயப் சிங் சைனி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சட்டப் பேரவையை முன்கூட்டியே கலைத்து, ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று (12.9.2024) நடவடிக்கை மேற்கொண்டார்.

அரசமைப்புச் சட்டத்தின்கீழ், மாநில பேரவை கடைசியாக கூடி யதில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும். அரியானாவில் பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த மார்ச் 13-ஆம் தேதி நடைபெற்றது. எனவே, அடுத்த கூட்டத்தை செப் டம்பா் 12-ஆம் தேதிக்குள் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மாநிலத்தில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பேரவையை கூட்ட வேண்டியதை தவிர்க்க அதை முன்கூட்டியே கலைக்குமாறு ஆளுநருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரைத்தது.

இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 174 (2) (பி) பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன் படுத்தி, பேரவையை ஆளுநா் நேற்று (12.9.2024) கலைத்தார். அரசமைப்புச் சட்ட சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இனி, காபந்து முதலமைச்சராக நாயப் சிங் சைனி செயல்படுவார். அரியானா பேரவையின் பதவிக் காலம் நவம்பா் 3-ஆம் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *