ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவா? இல்லையா? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

2 Min Read

புதுடில்லி, செப். 5 ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான, ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக் கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி நடத்துவாரா?’ என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

“ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்தத் தரவுகள் மக்களின் நல்வாழ்வுக் குப் பயன்படுத்தப்பட வேண் டுமே தவிர, அரசியல் ஆதாயங் களுக்கான கருவியாகப் பயன் படுத்தப்படக் கூடாது’ என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித் துள்ளது.

இதற்கு பதில் கூறும் வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் வலைதளத்தில் 3.9.2024 அன்று வெளியிட்ட பதிவில், “ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனைகள் சில அடிப் படைக் கேள்விகளை எழுப்பு கிறது. அத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்படுவதை நிராகரிக்கும் அதிகாரம் அந்த அமைப்புக்கு உள்ளதா என்பது முதல் கேள்வியாகும்.

ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு அனுமதி அளிக்க ஆர்.எஸ்.எஸ். யார்? தேர்தல் ஆதாயத்துக்காக அந்தக் கணக்கெடுப்பு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று அந்த அமைப்பு கூறுவதன் அர்த்தம் என்ன? ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்ன நீதிபதியா அல்லது நடுவரா?

தாழ்த்தப்பட்டோர் ஆதிவாசி கள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகியோருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு உச்ச வரம்பை அகற்ற அரசியல்சாசன சட்டத்திருத்தம் செய்ய வேண் டியதன் அவசியம் குறித்த விவ காரத்தில் ஆர்.எஸ்.எஸ். மவுனம் சாதிப்பது ஏன்?

தற்போது ஆர்.எஸ்.எஸ். பச்சைக்கொடி காட்டி விட் டதால், எங்கள் கட்சியின் (காங்கிரஸ்) மற்றொரு வாக்குறுதித் திட்டத்தை கடத்திச் சென்று, ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி நடத்துவாரா? என்று ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் “ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆதரிக்கிறோமா, எதிர்க்கிறோமா என்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெளிவுபடுத்த வேண்டும். நாட் டின் அரசியல்சாசனத்துக்கு பதிலாக மனு ஸ்மிருதியை ஆதரிக்கும் சங் பரிவார் அமைப்புகள், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட் டோரின் பங்களிப்பைப் பற்றி கவலைப்படுகின்றனவா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *