’18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

viduthalai
1 Min Read

சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் விரைவில் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். இது குறித்து சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது;-

“உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு என்பது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறி யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனை வருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங் களிலும் இந்த ஆண்டு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற் கொள்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஆரம்ப நிலைகளிலேயே புற்றுநோயை கண்டறிந்தால், அவர்களை 100 சதவீதம் காப்பாற்றிவிட முடியும்.”
– இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *