புதுடில்லி, ஆக.30 இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.28 ஆயிரத்து 602 கோடி முதலீட்டில் 12 புதிய தொழில் நகரங்கள் அமையும் எனவும், உத்தரப்பிரேதசம், பீகார், ஆந்திரா உள்பட 10 மாநிலங்களின் வளா்ச்சி ஊக்கமளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தின் குர்பியா, பஞசாப்பின் ராஜ்புரா பாட்டியாலா, மகாராட்டிராவின் திகி, கேரளாவில் பாலக்காடு, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, பிரயாக்ராஜ் (அலகாபாத்), பீகாரின் கயா, தெலங்கானாவின் ஜஹீராபாத், ராஜஸ்தானின் ஜோத்பூர் பாலி உள்ளிட்ட இடங்களில் தொழில் நகரங்கள் அமைய உள்ளன.
இதன் மூலம் உலகத் தரத்தில் பசுமை நகரங்களாக இவை உருவாகும் என ஒன்றிய அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘தேசிய தொழில் துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைய உள்ளன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் நாட்டின் தொழில்துறை நிலப்பரப்பு உயரும்.
இதனால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி கணிசமாக அதிகாிப்பதுடன், உலகளாவிய போட்டித்தன்மையும் உயரும். உலக அளவில் பசுமை நகரங்களாக அவை உருவாகும். தொழில் முனைவோருக்கு ஏற்ற நகரமாக இவை அமையும். ரூ.1.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த நகரங்கள் மூலம் 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 30 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று கூறினார்.
உலக அளவில் உற்பத்தி பணிகளில் பெரும்பா லும் இந்தியாவை கொண்டு நடக்கின்றன. எலெக்ட்ரா னிக் உற்பத்தி, கைப்பேசி அல்லது பாதுகாப்பு உதிரி பாகங்கள் உற்பத்தி என எதுவாக இருந்தாலும் இந்தியாவின் பங்கு இன்றி அமையாததாக உள்ளது. தற்போது புதிதாக உருவாக உள்ள தொழில் நகரங்களில் ஒட்டுமொத்த நாட்டையும் சீரான வளா்ச்சி பாதையில் எடுத்து செல்லும் என கூறப்படுகிறது.
12 தொழில் நகரங்களில்
தமிழ்நாடு இடம்பெறவில்லை!
நாட்டின் உற்பத்திக்கு உதவும் வகையில் 12 தொழில் நகரங்கள் அமைக்கப்பட இருந்தா லும், அனைத்து வளங்களும் நிறைந்த தமிழ்நாட்டில் ஒரு தொழில் நகரம் கூட தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது. பீகார் போன்ற மாநிலங்களில் தொழில் நகரங்கள் அமைக்கப்படுவதைக் காட்டிலும், தமிழ்நாட்டில் தொழில் நகரம் அமைந்தால் அனைத்து வசதிகளும் கொண்டு ‘அசுர’ வேகத்தில் நாட்டின் வளா்ச்சிக்கு பங்காற்றும் வாய்ப்பிருக்கும்.
தமிழ்நாடு தொழில் முதலீடுகள் செய்வதற்கு மிகச் சிறந்த மாநிலமென்று ஒன்றிய அரசின் நிட்டி ஆயோக் சமீபத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் ,தொழில் நுட்பத்தில் உயர்கல்வி பயின்ற, மிகவும் நேர்த்தியான கல்வியோடு பட்டம் பெற்ற ஆண் – பெண் பட்டதாரிகள் மட்டுமின்றி கடுமையான உழைப்பைத் தரும் பணியாளர்களைக் கொண்ட மாநிலம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது
மேலும் சட்டம் -ஒழுங்கு மிக நன்றாக பேசப்படு கின்ற மாநிலமாக விளங்குகிறது
தொடர்ந்து பழிவாங்கப்படும்
தமிழ்நாடு
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக விளங்குகிறது என்று தொடர்ச்சியாக டில்லியைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஆய்வுகளோடு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இந்நிலையில்தான்,தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது தேர்தலில் தமிழ்நாடு பா.ஜ.க.விற்கு கொடுத்த அடியை மனதில் வைத்து தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மெட்ரோ ரயிலுக்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு ‘பட்டை நாமம்‘ போட்ட மோடி அரசு தற்போது தொழில் நகரத் திட்டத்திலும் தமிழ்நாட்டைப் புறக்கணித்துள்ளது/
தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு முறை தோல்வி அடைந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகி உள்ள
எல்.முருகனும் இதற்கு என்ன பதில் கூறுவார்கள்?