பாஞ்சாலம், ஆக.29 திண்டிவனம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் பாஞ்சாலம் கிராமத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு பரப்புரை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதற்கான கலந்துரையாடல் கூட்டம் ஒலக்கூர் ஒன்றிய தலைவர் பாஞ்சாலம் ஏ.பெருமாள் இல்லத்தில் 27.8.2024 அன்று கழக அமைப்பாளர் தா.இளம்பரிதியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
ஒலக்கூர் ஒன்றிய தலைவர் பாஞ்சாலம் ஏ.பெருமாள் அனைவரையும் வரவேற்று பேசினார். தந்தை பெரியார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாஞ்சாலம் பெரு மாளின்வாழ்விணையர் சாந்தி பேசும்போது, பாஞ்சாலத்தில் தந்தை பெரியார் சிலையும், புரட்சியாளர் அம்பேத்கர் சிலையும் நிறுவ தான் அணிந்திருக்கும் நான்கு பவுன் தாலிச் சங்கிலியைத் தருவதாக அறிவித்தார்.
பாஞ்சாலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பேபி கமலா நாராயணசாமி பேசும்போது, சிலை வைப்பதற்கான இடத்தைத் தருவதாக சொல்லியிருக்கிறார். மயிலம் ஒன்றிய செயலாளர் ச. அன்புக்கரசன் பேசும்போது, சிலை வைப்பதற்கானபங்களிப்புத் தொகையாக ரூபாய் பத்தாயிரம் தருகிறேன் என அறிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் இர.அன்பழகன் மாவட்ட செயலாளர், செ. பரந்தாமன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் நவா.ஏழுமலை, மாநில இளைஞரணி துணை செயலாளர் தா. தம்பி பிரபாகரன், திண்டிவனம் நகர தலைவர் உ.பச்சையப்பன், திண்டிவனம் நகர செயலாளர் சு. பன்னீர்செல்வம், மரக்காணம் ஒன்றிய தலைவர் ஜெ.கன்னியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.இரமேஷ், ஒலக்கூர் ஒன்றிய துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் க.பாலசுந்தரம், ஒலக்கூர் ஒன்றிய அமைப்பாளர் அருள், பாஞ்சாலத்தைச் சார்ந்த பெரியார் பற்றாளர்கள் ஜானகிராமன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் ஒலக்கூர் ஒன்றிய துணை செயலாளர் ராஜாராம் நன்றி கூறினார்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தலைமைக் கழகம் அறிவித்த மூட நம்பிக்கை ஒழிப்புப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, தந்தை பெரியார் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது, ஒன்றியங்கள் தோறும் கொடியேற்றுவது, கிராமப்புற பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல், ‘விடுதலை’, ‘உண்மை’ சந்தாக்களை சேர்ப்பது, வெகு விரைவில் பாஞ்சாலம் கிராமத்தில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை நிறுவுவது என தீர்மானிக்கப்பட்டது.