குடிக்கும் பாலில் கூட தீண்டாமையா?

Viduthalai
2 Min Read

நாட்டுப் பசுமாட்டுப் பால் என்று கூறி விற்பனை செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை

புதுடில்லி, ஆக.26 அரசியலில் பசுமாடு மிகவும் பேசும் பொருளாகிவிட்டது. இதைவைத்து வணிகம் செய்ய கார்ப்பரேட்டுகள் எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவதுபோல் நாட்டுப்பசுமாட்டுப்பால் மட்டுமே குடியுங்கள் அதுதான் உண்மையான கோமாதாவிற்கு நாம் செய்யும் மரியாதை என்று கதைவிட்டு என்றோ எழுதிய ஆய்வுக்கட்டுரையை முன்னிறுத்தி நாட்டுப்பசு மாட்டின் பாலில் ஏ2 வகை புரதம் உள்ளது வெளிநாட்டு இறக்குமதி பசுக்களின் பாலில் ஏ1 வகை புரதம் இருக்கிறது என்று கதைவிட்டார்கள்.

குறிப்பாக உயர்வகுப் பாரிடத்தில் இது மிகவும் பிரபலமாகி விட்டது
இதை வைத்துக்கொண்டு நாட்டுப்பால் குடிப்பவர்கள் இதர பால் குடிப்பவரக்ள் என்ற ஒரு பிரிவினையையே உருவாக்கிவிட்டனர். அதாவது நாட்டுப்பால் குடிப்பவர்கள் உயர்ஜாதியினர் இதர பால் குடிப்பவர்கள் கீழ்ஜாதியினர் என்று வகைப்படுத்தும் அளவிற்கு கொண்டுவந்துவிட்டனர்.

இந்த நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்துஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டிருக்கும் உத்தரவில் ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை பால் அல்லது பால் பொருள் என்று குறிப்பிடுவது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006க்கு முரணானது என்று கூறியுள்ளது.

நாட்டுப் பசுவின் பாலில் உயர்ரக புரதம் ஏ2 இருப்பதாகவும், அதாவது புனிதமானதாம் ––- ஏ1 பாலில்புனிதம் கெட்டு விடுவதாக ஒரு உணவு வணிக நிறுவனங்கள் அந்த பாக்கெட்டு களின் மீது குறிப்பிடுகின்றன.
இதை ஆய்வு செய்தஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள்,ஏ1 மற்றும் ஏ2 பால் அவற்றின் புரத கலவையில் வேறுபடுகின்றன என்றபோதும் இதற்கும் நாட்டுமாடு வெளி நாட்டு இறக்குமதி மாட்டு இனம் என்ற மாறுபாடு எதுவும் இல்லை என்று தெரிவித்துள் ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் இணையதளங்களில் இருந்து புனிதமான அல்லது புனிதமற்ற என்று குறிப்பிடும் ஏ1 ஏ 2 போன்றவற்றை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டுள்ள உணவு பாதுகாப்புகழகம், அனைத்து பால்வள விற்பனை அமைப்புகளும் இதனை அகற்ற அறிவுறுத்தியுள்ளது.
முன் அச்சிடப்பட்ட லேபிள்களை வெளி யேற்றி நீக்க ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட் டுள்ளது, மேலும் நீட்டிப்புகள் எதுவும் வழங்கப் படாது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *