தூத்துக்குடி, ஆக. 21- தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 18.8.2024 அன்று காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி, பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.
முதலில் மாணவர்கள் பதிவு நடைபெற்றது. தேநீர் அருந்திய பின் சரியாக 11 மணியளவில் மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் தலைமை யேற்க, கழக மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, செயலாளர் கோ.முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கப் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
முதலில் ப.க. மாவட்ட அமைப்பா ளர் சி.மோகன்தாஸ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தலைமையுரைக்குப் பின், பணி நிறைவு பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் சீ.மனோகரன் தொடக்க வுரையாற்றினார். திராவிடர் கழக காப்பாளர் மா.பால்ராசேந்திரம் பேசும்போது மாணவர்களின் பேச்சு எவ்வாறு அமைய வேண்டுமென வழிகாட்டி உரையாற்றினார். உலகத் திருக்குறள் பேரவை மாவட்டச் செயலாளர் மோ.அன்பழகன், வழக்குரைஞரணித் தோழர் இ.ஞா.திரவியம், திருவை ஒன்றியத் தலைவர் சு.திருமலை குமரேசன் ஆகியோர் மதிப்பீட்டாளர்களாகப் பணியாறறினர்.
மாணவர்களின் உரைக்குப் பின் அனைவருக்கும் நண்பகல் உணவு வழங்கப்பட்டது. உணவுக்குப் பின் பரிசளிப்பு நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் தந்தை பெரியாரின் பணி, இயக்கத்தின் செயல்பாடு, மாணவர்கள் இவ்வ மைப்பில் சேரவேண்டியதின் முக்கி யத்துவம் பற்றி உரையாற்றி, வந்திருந்து போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டி நிறைவு செய்தார்.
தூத்துக்குடி தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் இராசா அவர்கள் தந்த முதல் பரிசுத் தொகை மூன்றாயிரம் ரூபாயை நாகலாபுரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவி வே.சந்தியாவுக்கு ப.க. மாவட்டச் செயலாளர் வழங்கி னார். தூத்துக்குடி துறைமுக அலு வலர் சு.மாரிமுத்து அவர்கள் தந்த இரண்டாம் பரிசுத் தொகை இரண்டாயிரம் ரூபாயை குறுக்குச் சாலை கீதாஜீவன் கலை, அறிவியல் கல்லூரி மாணவன் ச.ஆதிநாராயண மூர்த்திக்கு மோ.அன்பழகன் வழங்கினார். பணிநிறைவு பெற்ற கணக்கு ஆசிரியர் மதுரை கணேசன் அவர்கள் தந்த மூன்றாம் பரிசுத் தொகை ரூ.1000அய் சாயர்புரம் போப் கல்லூரி மாணவி இ.பிரின்சியா எஸ்தருக்கு சி.மனோகரன் வழங்கினார்.
திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தந்த ஆறுதல் பரிசுத் தொகை ரூ.1000அய் குறுக்குச் சாலை, ஜீதாஜீவன் கலை, அறிவியல் கல்லூரி மாணவன் ச.மகாராஜாவுக்கும், மாணவி மா.சுகன்யாவுக்கும் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, செயலாளர் கோ.முருகன் ஆகியோர் வழங்கினர். பணி நிமித்தமாக வர இயலாத ப.க. மாவட்டத் தலைவர் ச.வெங்கட்ராமன், மாநகர ப.க. செயலா ளர் சு.புததன் ஆகியோர் நிகழ்சி சிறப்புரை வாழ்த்துச் சொன்னார்கள். நிறைவாக வழக்குரைஞரணி ந.செல்வம் நன்றி கூற, போட்டி இனிதே நிறை வுற்றது.
இந்நிகழ்வில் பெரியார் மய்யம் காப்பாளர் பொ.போஸ், கி.கோபால்சாமி, வாகைக்குளம் கனக ஜோதி, செந்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு பேருதவி செய்தார்கள்.