சென்னை, ஆக.11 வயநாட்டில் நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என அந்த பேரமைப்பினா் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் உறுதி அளித்துள்ளனா்.
இது குறித்து பேரமைப்பு சார்பில் நேற்று (10.8.2024) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, பொதுச் செயலா் வெ.கோவிந்த ராஜுலு, பொருளாளா் ஏ.எம். சதக்கத்துல்லா, நீலகிரி மாவட்டத் தலைவா் கே.முகமது ஃபாரூக் உள்ளிட்ட நிர்வாகிகள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை 9.8.2024 அன்று நேரில் சந்தித்தனா்.
அப்போது, வயநாடு பேரிடரில் வீடுகளை இழந்த 100 பேருக்கு பேரமைப்பு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என அதன் நிர்வாகிகள் உறுதியளித்தனா். வீடுகள் கட்டித் தரும் முயற்சிக்கு கேரள மாநில அரசு சார்ந்த அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி உதவுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதைத் தொடா்ந்து நீலகிரி மாவட்டத் தலைவா், நிர்வாகிகளின் ஒருங்கிணைப்புடன் இந்த பொதுநலத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு பேரமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினா்கள் துணை நிற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலம், உத்தராகண்டில் கனமழை
நிலச்சரிவால் சாலை போக்குவரத்து பாதிப்பு
சிம்லா, ஆக.11 இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக மாநிலத்தில் உள்ள 128 சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இமாசலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் 9.8.2024 அன்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சீா்மௌர் மாவட்டத்தின் நஹான் பகுதியில் 168.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், கனமழை காரணமாக மண்டி, சீா்மெளா், சிம்லா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் இன்று (11.8.2024) காலை வரை வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்குவதால், சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் என்றும், தோட்டங்கள், பயிர்கள் மற்றும் வீடுகள் சேதமடைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்தது. மேலும், சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் 10.8.2024 அன்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மாநில அவசர நடவடிக்கை மய்ய தகவலின்படி மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலத்தில் 128 சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கனமழை காரணமாக நிகழாண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்தது.
பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் மாநிலத்திற்கு சுமார் ரூ. 842 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் 9.8.2024 அன்று இரவு பெய்த கனமழையால் அப்பகுதி யில் நிலச்சரிவு ஏற்பட்டு பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து சனிக்கிழமை தடைபட்டது.
நிலச்சரிவைத் தொடா்ந்து மலைகளில் இருந்து விழுந்த பாறைகளால் கமேடா, நந்த்பிரயாக் மற்றும் சின்கா ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சாலையில் இருந்து பாறைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.