”எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி” பா.ஜ.க.வினருக்கு கேரள இளைஞர் பதிலடி!

1 Min Read

திருவனந்தபுரம், ஆக. 4- எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி என – பா.ஜ.க.வினர் பொய்யாக பரப்பிய காணொலிக்கு கேரள இளைஞர் பதிலடி கொடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 344 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாயின. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பா காந்தி சென்ற வாகனத்தை நிறுத்தி இளைஞர் ஒருவர், நிலச்சரிவின் பாதிப்புகள் குறித்து விளக்கினார். ஆனால் இதை பா.ஜ.க.வினர் ராகுல் காந்தியை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியதாக போலியாக காணொலிகளை இணையத்தில் வைரலாக்கினர்.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் ரெஜினாஸ், என்ன நடந்தது என்பதை விளக்கி சமூகவலைதளத்தில் காணொலி வெளியிட்டுள்ளார். அதில், ”நான் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தவில்லை. அவர் எங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் ஒருவர். நான் அவரிடம் நிலைமையை விளக்கினேன். இதை பா.ஜ.கவினர், நான் அவரை தடுத்து நிறுத்தியதாக பொய்யாகத் திரிக்கின்றனர்.” என கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *