கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

 
29.7.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* போஜ்புரி மொழியை அரசியல் சட்ட எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்; நடிகரும் எம்.பி.யுமான ரவிசங்கரின் தனிநபர் மசோதா மக்களவையில் அறிமுகம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அக்டோபர் 2இல் புதிய கட்சி ‘ஜன் சுராஜ்’ தொடங்குகிறார், அரசியல் கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ரூ. 400 கோடி மீன்பிடி ஊழல் வழக்கில் பாஜக மேனாள் அமைச்சர்கள் இருவரின் விடுதலை மனுக்களை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரிப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்ததை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு; சி.பி.எம். எம்.பி. சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *