நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம் மக்களவையில் தகவல்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 27- ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு உயர்நீதிமன் றங்களில் 60,11,678 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்க ளில் 4,53,51,913 வழக்குகள் தேங்கி உள்ளன.

ஒட்டுமொத்தமாக நாடு முழு வதும் பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிக மான வழக்குகள் தேங்கி உள்ளன. மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தின் கீழமை நீதிமன்றங்களில் 1.18 கோடி வழக்குகள் நிலு வையில் உள்ளன.

நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்பு கள் இல்லாதது, நீதிமன்ற ஊழியர்கள் பற்றாக்குறை, காவல்துறையினர், சாட்சிகள், மனுதாரர்கள், வழக்குரைஞர்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் வழக்கு கள் தேக்க மடைந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *