நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம் மக்களவையில் தகவல்

1 Min Read

புதுடில்லி, ஜூலை 27- ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு உயர்நீதிமன் றங்களில் 60,11,678 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்க ளில் 4,53,51,913 வழக்குகள் தேங்கி உள்ளன.

ஒட்டுமொத்தமாக நாடு முழு வதும் பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிக மான வழக்குகள் தேங்கி உள்ளன. மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தின் கீழமை நீதிமன்றங்களில் 1.18 கோடி வழக்குகள் நிலு வையில் உள்ளன.

நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்பு கள் இல்லாதது, நீதிமன்ற ஊழியர்கள் பற்றாக்குறை, காவல்துறையினர், சாட்சிகள், மனுதாரர்கள், வழக்குரைஞர்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் வழக்கு கள் தேக்க மடைந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *