ஆரணியில் நீட் எதிர்ப்பு பரப்புரைக் கூட்டத்தில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்பு

1 Min Read

ஆரணி, ஜூலை 27- ஆரணியில் 12.07.2024 மாலை 05.30 மணியளவில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பயண நிகழ்வு நடைபெற்றது.மேனாள் மாவட்ட செயலாளர் சேத்பட் அ.நாகராசன் தலையேற்க மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் அசோகன் முன்னிலையில் மேற்கு ஆரணி நகர்மன்ற தலைவர் ஏ.சி.மணி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். கழக துணைபொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்சியில் விசிக நகர செயலாளர் ரமேஷ் கலந்துகொண்டு நீட் எதிர்ப்பு ஏன்? புத்தகம் 200 பெற்றுக் கொண்டார். திமுக சார்பில் 200 படிகள் கழகத்தின் சார்பில் 100 படிகள் மொத்தம் 500 புத்தகங்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில் திமுக, விசிக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு நகர கழக தலைவர் தி.காமராஜ், மாவட்ட செயலாளர் பொன் சுந்தர் சீனு, ஆரணி வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரச்சார குழுவினருக்கு சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *