திருமானூரில் நடைபெற்ற வைக்கம் போராட்டம், கலைஞர் நூற்றாண்டுவிழாப் பொதுக்கூட்டம்

2 Min Read

அரசியல்

திருமானூர், ஆக.18 அரியலூர் மாவட் டம் திருமானூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் 13.8.2023 ஞாயிறு மாலை 5.30 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடை பெற்றது. திருமானூர் ஒன்றிய கழகத் தலைவர் க. சிற்றரசு தலைமையேற்க, ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாதன் வரவேற்புரையாற்றினார். கழக காப் பாளர் சு. மணிவண்ணன், திருமானூர் ஊராட்சி மன்ற தலைவர்உத்திராபதி, நாயக்கர் பாளையம் முனைவர் கி. சவுந்தரராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

குல மாணிக்கம் பேராசிரியர்  இ.வள னறிவு, மேனாள்திமுக மாவட்ட துணைச் செயலாளர் ந.தனபால், திரு மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செய லாளர் இரா. கென்னடி, மாவட்ட செய லாளர் மு.கோபாலகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமை கழக அமைப் பாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகி யோர் உரையாற்றிய பின்னர்  கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார். 

அவர் தமது உரையில், வைக்கம் போராட்ட வரலாற்றினை விளக்கியும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நூற் றாண்டு விழா கொண்டாட வேண்டிய காரணங்களை விளக்கியும் மூடநம்பிக் கைகளால் நம்முடைய சமுதாயம் பாழ் பட்டு கிடப்பதை- சீர்திருத்த வேண்டிய காரணங்களையும் விளக்கி சிறப்புரை யாற்றினார்.திருமானூர் நகர செயலாளர் சு.சேகர் நன்றி கூறினார். பெரம்பலூர் மு.விஜயேந்திரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை செய்து காட்டி சாமி யார்களின் மோசடிகளை தோலுரித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் மா.சங்கர்,பொன் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க. செந்தில், மாவட்ட தொ.அ. தலைவர் தா.மதியழகன், அரி யலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து ஒன்றிய இ.அ. தலைவர் க. மணிகண்டன், உல்லியக்குடி வை. கலையரசன், சங்கர் அப்பா சாமி, அன்னிமங்கலம் சு .பார்த் திபன் அரண்மனைக் குறிச்சி முரு கேசன், தேளூர் முருகையன் ஆண்டி மடம் த.கு. பன்னீர்செல்வம் திருமானூர் சே.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *