இதுதான் கடவுள் சக்தியோ!

1 Min Read

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் சாவு

திருவண்ணாமலை, ஜூலை22- ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு 20.7.2024 அன்று காலை முதல் பல லட்சம் பக்தர் கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். நேற்று காலை 6 மணியளவில் கிரிவலம் வந்த 50 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர் கிரிவலப்பாதை முடியும் இடமான வேலூர் ரோடு தமிழ்நாடு ஓட்டல் அருகில் சாலையோரம் உள்ள இடத்தில் அமர்ந்தார். தான் வைத்திருந்த தண்ணீரை அருந்திய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.

108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்து அந்த நபரை சோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிரிவலப்பாதையில் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த நபரின் உடலை உடற்கூராய்வுக்காக திரு வண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் சேலம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் சட்டை பையில் பேருந்து பயணச்சீட்டை தவிர வேறு எந்த அடையாள அட் டையும், அலைபேயும் இல்லாததால் அவர் யார் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *