கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலையில் சேருவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு

1 Min Read

சென்னை, ஆக. 18– தமிழ்நாட் டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு களில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக் கப்பட்டு உள்ளது. 

சென்னை பல்கலைக் கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவு கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-20-24-ஆம் ஆண்டிற் கான முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணாக் கர் சேர்க்கைக்கு விண் ணப்பிக்கும் கால அவ காசம் 1.9.2023 வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- 

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023–2024-ஆம் ஆண் டிற்கான முதுநிலை பட் டப் படிப்புகளில் முத லாமாண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023இ-ல் துவங்கி www.tngasa.in மற்றும்  www.tngasa.org  என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க லாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை பல்கலைக் கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவு கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலை பட்டப் படிப் பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப் பிக்கும் கால அவகாசம் 01.09.2023 வரை நீட்டிக் கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *