குற்றவியல் வழக்குகளில் ஆளுநர்களுக்கு விலக்களிக்கும் சட்டப் பிரிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 21- மேற்கு வங்காள ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணிபுரி யும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் கொல்கத்தா காவல் துறையினரிடம் பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஆனந்த போஸ், புகாரில் கூறப்பட்டுள்ள நாளான மே 2ஆம் தேதி அன்று மாலை 5.32 மணி முதல் 6.41 மணி வரை ஆளுநர் மாளிகையின் வடக்கு வாசலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் சிலரிடம் ஆளுநர் மாளிகையில் திரையிட்டுக் காட்டினார்.
இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்திற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் ஆளுநர் மாளிகைக்கு செல்ல தங்களுக்கு பயமாக உள்ளது என சில பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் மம்தா தெரிவித்தார். இதனை கண்டித்து மம்தா மீது ஆனந்த போஸ் கடந்த ஜூன் 28ஆம் தேதி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இதனிடையே குற்றவியல் விசாரணையில் இருந்து ஆளுநர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 361அய் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி, ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்த பெண் தரப் பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள், குற்றவியல் விசாரணையில் இருந்து ஆளுநர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்தை ஆய்வு செய்ய சம்மதம் தெரிவித்தனர். மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பையும் இணைக்க மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *