வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகள் சரிபார்ப்புப் பணிக்கு 1 மாதம் ‘கெடு’

viduthalai
1 Min Read

மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 18- பணி காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், அந்தந்த ஊர்களிலேயே ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்வதற் காக பதிவு செய்வதற்கு ‘இ-ஷ்ரம்’ என்ற இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது.

அதில், சுமார் 8 கோடி தொழிலா ளர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவர்களை சரிபார்க்கும் பணியை முடித்து 4 மாதங்களுக்குள் ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், 16.7.2024 அன்று இவ்வழக்கு நீதிபதிகள் சுதன்சு துலியா, அசானுதின் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பீகார், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மட்டுமே சரிபார்ப்புப் பணியை முடித்துள்ளதாக மனு தாரர்களின் வழக்குரைஞர் சுட்டிக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து, இன்னும் ஒரு மாதத்துக்குள் சரிபார்ப்புப் பணியை முடிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட செயலாளர்களுக்கு அழைப்பாணை அனுப்புவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். விசாரணையை ஆகஸ்டு 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *