‘நீட்’ தேர்வை ரத்து செய்திட பிரச்சாரப் பயணத்தில் பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்போம்

viduthalai
1 Min Read

கடலூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

கடலூர், ஜூலை7- கடலூர் மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்திட பிரச்சாரப் பயணம் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் 29.6.2024 அன்று மாலை 6 மணிக்கு வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம் தலை மையில் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பி னர் நா.தாமோதரன் முன்னிலை வகித்தார் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி, நா.முருகன், சே.முனியம்மாள், இரா.மாணிக்கவேல், தங்கபாஸ்கர், ராஜேந்திரன், கோ.வேலு, இரா.கண்ணன், டிஜிட்டல் ராமநாதன், நா.பஞ்சமூர்த்தி, நா.உதவி சங்கர், இரா.குணசேகரன், வா.சேகர், புலவர் ராவ ணன், கடலூர் மாதவன், சின்னதுரை, தர்மன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம் செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலி யுறுத்தி திராவிடர் கழகம் இளைஞர் அணி மாணவர் கழக சார்பில் தமிழ்நாடு அளவில் 11.7.2024 முதல் 15.7.2024 வரை வாகனப் பேரணி நடைபெற உள்ளது.

மூன்றாவது குழு புதுச்சேரியில் தொடங்க உள்ள தொடர் பிரச்சாரப் பயணத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களை இருசக்கர வாகனதுடன் பங்கேற்க வைப்பது எனவும் மாவட்ட பகுதியில் கழகக் கொடி யினைக் கட்டி டிஜிட்டல் பதாகைகள் வைத்து சிறப் பாக வரவேற்பு அளிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை சந்தாக்களை விரைந்து முடித்திட செயலாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சி.மணி வேல் நன்றி கூறிட கலந்து ரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *