நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைக் கூட பேச அனுமதிக்க மறுப்பதா?

Viduthalai
1 Min Read

டில்லியில் கனிமொழி எம்.பி., பேட்டி

புதுடில்லி, ஜூன் 29- எதிர்க்கட்சித் தலைவரைக் கூட பேச அனு மதிக்க மறுப்பதா? என்று நாடாளு மன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி டில்லியில் நேற்று (28.6.2024) செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியின் அத்தனை தலைவர்களும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நீட் தேர்வு குறித்து ஒத்திவைப்பு தீர்மான அறிவிக்கையை அளித்து இருந்தனர். ஆனால் அதை விவாதிக்க முடியாது என்ற நிலையில் அரசு இருக்கிறது. எதிர்க்கட்சி தலை வர் ராகுல்காந்தியைக் கூட பேச அனுமதிக்கவில்லை. இதனால் ஏற் பட்ட அமளியைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க.வை பொறுத்தவரை நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தி.மு.க. ஏன் எதிர்க்கிறது? என்பதை இன்று நாட்டு மக்கள் புரிந்திருப்பார்கள். இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
-இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *