ஜூன் 4: இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்!

Viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

சென்னை, ஜூன் 1 கடைசி வாக்குப்பதிவு நாள் இன்றோடு (1.6.2024) முடிகிறது, ஜூன் 4 ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது:
பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது அதிக மான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடி யலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் – நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! இதை ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *