“மோடி கடவுள் என்றால் கலவரத்தை தூண்டக் கூடாது!” : மம்தா

Viduthalai
1 Min Read

கொல்­கத்தா, மே 31- கட­வுள்­தான் தன்னை அனுப்பி வைத்­த­தாக பிர­த­மர் மோடி அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், நரேந்­திர மோடி கட­வுள் என்­றால் அவர் அர­சி­ய­லில் ஈடு­ப­டக் கூடாது; கல­வ­ரத்தை தூண்­டக் கூடாது என்று மேற்­கு ­வங்க மாநில முதலமைச்சர் மம்தா கூறி­யுள்­ளார்.

மக்­க­ள­வைத் தேர்­தலை முன்­னிட்டு கொல்­கத்­தா­வில் நடை­பெற்ற பேர­ணி­யில் அவர் பேசி­யது. “ஒரு­வர் சொல்­கி­றார் அவரை கட­வு­ளுக்கு எல்­லாம் கட­வுள் என்று. மற்­றொ­ரு­வர் சொல்­கி­றார் பூரி ஜெகந்­நா­தரே அவ­ரு­டையே பக்­தர் என்று. அவர் கட­வுள் என்­றால் அர­சி­ய­லில் ஈடு­படக் கூடாது. கட­வுள் கல­வ­ரத்தை தூண்­டக் கூடாது. அவ­ருக்கு கோயில் கட்­டு­வோம். பிர­சா­தம், பூக்­கள் போன்­றவை வழங்­கு­வோம்.

நான் பல்­வேறு பிர­த­மர்­க­ளு­டன் பணி­யாற்றி உள்­ளேன். வாஜ்­பாய், மன்­மோ­கன் சிங், ராஜீவ் காந்தி, நர­சிம்மராவ், தேவ­க­வுடா ஆகி­யோ­ரு­டன் பணி­யாற்றி உள்­ளேன். ஆனால், இவ­ரைப்போன்ற பிர­த­மரை நான் பார்த்­தது இல்லை. அந்த மாதி­ரி­யான பிர­த­மர் நமக்கு வேண்­டவே வேண்­டாம்” என மம்தா கூறி­னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *