புற்றுநோய் மருத்துவ நிபுணர் ரவி கண்ணனுக்கு ‘ராமோன் மகசேசே’ விருது அறிவிப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணனுக்கு ‘ராமோன் மகசேசே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் காச்சார் புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் புற்றுநோயியல் நிபுணர் ஆக இருந்து வருகிறார். இவருக்கு “2023 ராமன் மகசேசே” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆசியாவின் நோபல் பரிசு’ என்று அழைக்கப்படும் ‘ராமோன் மகசேசே’ விருது, ஒவ்வொரு ஆண்டும் ஆசிய நாடு களில் ஒருமைப்பாடு, துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தனிநபர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான ‘ராமோன் மக்சேசே’ விருது அறிவிக்கப் பட்டு உள்ளது.

 செப்டம்பர் 1, 2023 அன்று 2023ஆம் ஆண்டுக்கான  ‘ராமோன் மக்சேசே’ விருது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட் டது. அதன்படி,  65ஆவது ரமோன் மகசேசே விருதுகள்  4 பேருக்கு அறிவிக் கப்பட்டு உள்ளது.  ராமன் மகசேசே விருது, விதிவிலக்கான மனப்பான்மை மற்றும் செல்வாக்கு மிக்க தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குறிப்பிடத்தக்க பாராட்டு ஆகும். 

இந்த ஆண்டு, விழாவின் 65 வது பதிப்பில், நான்கு ஆசியர்களுக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது, சர் ஃபசில் ஹசன் அபேட், அன்னை தெரசா, தலாய் லாமா, சத்யஜித் ரே மற்றும் பலர் வரிசையில் வங்காளதேசத்தைச் சேர்ந்த கோர்வி ரக்ஷாந்த், திமோர்-லெஸ்டீயைச் சேர்ந்த யூஜெனியோ லெமோஸ், பிலிப் பைன்ஸைச் சேர்ந்த மிரியம் கரோனல்-ஃபெரர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணன்  ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருது ஒரு சான்றிதழும், மறைந்த அதி பரின் உருவம் கொண்ட பதக்கமும், அமெ ரிக்க டாலர் 50,000 ரொக்கப் பரிசையும் கொண்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *