அரசியல் மாற்றத்தின் புயல் நாடெங்கும் வீசுகிறது!

2 Min Read

ராகுல் காந்தி கருத்து

புதுடில்லி, மே 21- நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங் களாக நடந்து வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற் கொண்டு வருகிறார். அப்போது மக் களிடம் மாற்றத்துக்கான மனநிலை இருப்பதாக அவர் கூறியுள்ளார். நேற்று 5 ஆவது கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், அதை முன்னிட்டு தனது ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று (20.5.2024) அவர் கூறியிருந்ததாவது:-

வெறுப்பு அரசியலால் சலிப்பு
நேற்று (20.5.2024) 5 ஆவது கட்ட வாக்குப்பதிவு. அரசமைப்புச் சட்டத்தை யும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் உறுதியாக இருந்து பா.ஜனதாவை தோற்கடிக்கிறார்கள் என்பது முதல் நான்கு கட்டங்களிலேயே தெளிவாகி விட்டது.
இந்த நாடு வெறுப்பு அரசியலால் சலிப்படைந்து இப்போது தனது சொந்த பிரச்சினைகளுக்காக வாக்களிக்கிறது. வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கடன் சுமையில் இருந்து விடுதலைக்காக விவசாயிகள், பொருளாதார சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்காக பெண்கள், நியா யமான கூலிக்காக தொழிலாளர்கள் வாக்களிக்கிறார்கள்.
மக்கள் இந்தியா கூட்டணியுடன் இணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள் கிறார்கள். நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுகிறது. உங்கள் குடும்பத்தின் செழுமைக்காக, உங்கள் சொந்த உரி மைகளுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக் குமாறு அமேதி, ரேபரேலி உள்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நேற்று (20.5.2024) தேர்தல் நடந்த ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடு கிறார். எனவே, அவர் தொகுதியின் பல வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது சில வாக்குச்சாவடிகளில் அவரை பார்த்த வாக்காளர்கள், அவருடன் செல்பி நிழற் படம் எடுத்து மகிழ்ந்தனர்.

காங்கிரசின் 5 உத்தரவாதங்கள்
கார்கே, ராகுல் அழைப்பு
நாடாளுமன்ற 5 ஆம் கட்ட வாக்குப் பதிவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மேனாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக கார்கே தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்துவதற்கு முன்பு. நாம் வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு சில முதலாளிகளை மட்டும் பணக்காரர்களாக மாற்றக்கூடாது என்பதையும் மனதில் வைத்திருக்கவேண் டும். நமது அடிப்படை உரி மைகளைப் பாதுகாக்க வாக்களிக்கவேண்டுமே தவிர, நமது உரிமைகளைப் பறிப்பவர்களுக்காக அல்ல’ என குறிப்பிட்டிருந்தார்.
இதைப்போல ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ‘காங்கிரஸ் கட்சி வர லாற்று சிறப்புமிக்க 5 உத்தரவாதங்களை வழங்கியிருக் கிறது. அவற்றைக் கொண்டு உங்கள் அவதியை மாற்றுங்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *