பிரிவினை அரசியல் பிரதமர் மோடி செய்வது நாட்டுக்கு நல்லதல்ல! ‘தி இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கம்!

Viduthalai
2 Min Read

மக்­க­ளின் அடிப்­படைப் பிரச்­சி­னை­கள் குறித்து பேசா­மல், பிர­த­மர் பிரி­வினை அர­சி­யல் செய்­வது, நாட்­டுக்கு நல்­லத்­தல்ல என்று ‘தி இந்து’ ஆங்­கில நாளேடு தெரி­வித்­துள்­ளது.
‘தி இந்து’ ஆங்­கில நாளேடு (18.5.2024) வெளி­ யிட்டுள்ள தலை­யங்­கத்­தில், 543 மக்­க­ளவை தொகுதி க­ளில் 379 தொகு­தி­க­ளுக்கு 4 கட்­டங்­க­ளாக தேர்­தல் நடை­பெற்று முடிந்­துள்ள நிலை­யில், எஞ்­சிய 3 கட்ட தேர்­த­லுக்­கான பிரச்­சா­ரம் உச்­சக்­கட்­டத்தை எட்­டி­ யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வாக்­கு­களை அறுவடை செய்ய ஆளும் கட்­சி­யும்,எதிர்க்­கட்­சி­க­ளும் ஒரு­வர் மீது ஒரு­வர் மாறி, மாறி குற்­றச்­சாட்­டுக்­ களை முன்­வைத்து வரும் சூழ­லில், பிர­த­மர் மோடி­யின் குற்­றச்­சாட்­டுக்­கள் பெரும் பேசுப்­பொ­ரு­ளாக இருந்து வரு­கி­றது என கூறப்­பட்­ டுள்­ளது.

எதிர்க்­கட்­சி­கள் மீது அபாண்­ட­மான பொய் குற்­றச் சாட்­டுக்­களை மோடி சுமத்தி வரு­வ­தாக காங்­கி­ரஸ் உள்­ளிட்ட இந்­தியா கூட்­டணி கட்­சி­கள் தொடர்ந்து கண்­ட­னம் தெரி­வித்து வரு­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளது. உத்­த­ரப்­பி­ர­தேச மக்­க­ளை­யும், வட­மா­நி­லங்­க­ளை­யும் தென்­மா­நில அர­சி­யல் கட்­சி­கள் விமர்­சனம் செய்­வ தா­க­வும், குறைத்து பேசு­வ­தா­க­வும் தேர்­தல் பிரச்­ சாரத்­தில் பிர­த­மர் அப்­பட்­ட­மான பொய்யை கூறி­ யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
10 ஆண்­டு­கா­லம் ஆட்­சி­யில் இருந்­து­விட்டு, எந்­த­ வொரு சாத­னை­யும் செய்­யா­த­தால், அது­கு­றித்து பேச முடி­யா­மல், எதிர்க்­கட்­சி­யி­னர் மீது தேவை­யற்ற குற்­றச் சாட்­டுக்­களை சுமத்­து­வ­தும், ஜாதி, மதம் குறித்து பேசு வ­தும், இந்து – முஸ்­லிம் மக்­க­ளி­டை­யே­யான உற­வில் பிளவை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பேசு­வ­தும் என தனது வெறுப்­புப் பேச்­சுக்­களை பிர­த­மர் மோடி உமிழ்ந்து வரு­வ­தாக குற்­றம் ­சாட்­டப்­பட்­டுள்­ளது.

வேலை­வாய்ப்­பின்­மை­யா­லும், பண­வீக்­கத்­தா­லும் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளின் அடிப்­படை பிரச்சினை கள் குறித்து பேசா­மல், பிர­த­மர் பிரி­வினை அர­சி­யல் செய்­வது நாட்­டுக்கு நல்­ல­தல்ல என்று ‘தி இந்து’ ஆங்கில நாளி­தழ் தெரி­வித்­துள்­ளது.
வட மாநி­லங்­கள் உட்­பட அனைத்து மாநில மக்களை­யும் தென்­மா­நி­லங்­கள் நேசிப்­ப­தா­க­வும், தங்கள் மாநி­லத்­துக்கு வருகை தந்து பணி­பு­ரி­யும் அவர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து வச­தி­களை­யும், ஏற்­பா­டு­க­ளை­யும், பாது­காப்­பை­யும் உறுதிசெய்­வதா க­வும் ‘தி இந்து’ தலை­யங்­கத்­தில் தெரி­விக்­கப்பட்டு உள்­ளது.
வடஇந்­தி­யா­வில் வேலை­வாய்ப்பு இன்றி தென்னிந்­ தி­யா­வுக்கு புலம்­பெ­ய­ரும் மக்­க­ளின் எண்­ணிக்கை அதி­கம் இருக்­கும் நிலை­யில், வடக்­கை­யும், தெற்கை ­யும் பிரித்துப்பேசும் விஷ­மச் செயலை பிரத­மர் செய் யக்கூடாது என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள் ளது.

தமிழ்­நாட்­டில் பீகாரைசேர்ந்த தொழி­லா­ளர்­கள் தாக்­கப்­ப­டு­வ­தாக யூடி­யூ­பர் மணிஷ் காஷ்­யப் என்­ப ­வர் காட்சிப்பதிவு வெளி­யிட்டுவதந்தி பரப்­பி­ய­போது, அந்த விவ­கா­ரத்­தில் உரிய நட­வ­டிக்கை எடுத்து, அது ஒரு பொய் பிர­சா­ரம் என்­பதை உறுதி செய்து அவரை தமிழ்­நாடு அரசு கைது செய்­தது.
மணிஷ் காஷ்­யப் பரப்­பியதக­வல்பொய் என்ற போதி­லும், பீகார் உட்­பட வட­மா­நில தொழி­லா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் பாது­காப்பை ஏற்­ப­டுத்தி கொடுத்­தது தமிழ்­நாடு அரசு என்று ‘தி இந்து’ ஆங்­கில நாளேடு புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளது.
அதே­நே­ரத்­தில் வதந்தி பரப்­பிய நபரை தங்­க­ளது கட்­சி­யில் பா.ஜ.க., இணைத்துகொண்­ட­தாக விமர்சிக் கப் ­பட்­டுள்­ளது.

– நன்றி: முரசொலி, 20.5.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *