ஆர்.எஸ்.எஸ்ஸின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது! அமெரிக்காவுக்காக இந்தியாவின் நலனை அடகு வைத்தோம்! ஒப்புக்கொண்ட ராம் மாதவ்!-புதூரான்

3 Min Read

“நாங்கள் அமெரிக்கா கூறிய அனைத்தையும் இந்திய நலன்களுக்கு எதிரானது என்று தெரிந்தும் செய்தோம்” என்று ஒப்புக்கொண்ட ராம் மாதவ்.

வெளிநாட்டு மண்ணில் ராம் மாதவ்:
பேச்சும் சர்ச்சைகளும்!

இந்தியாவின் ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் தேசிய செயற்குழு உறுப்பினரான ராம் மாதவ், அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசிய சில கருத்துகள் கவனிக்கத்தக்கவை.

அவர் பேசியவற்றின் முக்கிய அம்சங்கள்:

ராம் மாதவ் (BJP மற்றும் RSS மூத்த தலைவர்) அமெரிக்காவின் வாசிங்டன் DC-யில் உள்ள ஹட்சன் இன்ஸ்ட்டிடியூட்டின் (“New India Conference”) என்ற நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“இந்தியா உங்களுக்கு (அமெரிக்காவிற்கு) என்ன குறை வைத்தது? நீங்கள் ஈரான் மற்றும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கவேண்டாம் என்றீர்கள்.  எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தபோதும் நாங்கள் ஈரான் மற்றும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டோம்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி (tariff) விதிப்பை பற்றி நாங்கள் கொஞ்சமும் எதிர்த்துப் பேசவில்லை. அதே நேரத்தில் பல நாடுகள் தொடர்ச்சியாக அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தன.

இருப்பினும் நாங்கள் அமைதியாக . புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் 18 சதவீத வரியை ஏற்றுக்கொண்டோம். பல்வேறு நெருடல்கள் இருந்தபோது (பெண்கள் சிறுவர்கள் என அனைவரையும் சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி கைவிலங்கிட்டு அமெரிக்க ராணுவ விமானத்தில் கொண்டுவந்ததை மறைமுகமாக குறிப்பிட்டு) நாங்கள் அமைதியாக இருந்தோம்.

இன்னும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்? எல்லா விதத்திலும் நாங்கள் சமரசம் செய்துகொண்டோம்.

டிரம்ப் நிர்வாகத்தின்) அழுத்தங்களுக்கு இணங்கி பல விஷயங்களில் சமரசம் செய்துகொண்டோம் மேலும் நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம். ஆனாலும், அமெரிக்கா இன்னும் திருப்தியடையவில்லை” என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் (காங்கிரஸ் உட்பட) இதை “ராஷ்ட்ரிய சரண்டர் சங்கம்” (National Surrender Sangh) என்று விமர்சித்தனர். ராம் மாதவின் பேச்சு, மோடி அரசு அமெரிக்காவுக்கு முன் தங்களின் அடிமைத்தனத்தைக் காட்டியதாகவும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இறையான்மையை விட்டுக்கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதை ஆர்.எஸ்.எஸ்./பிஜேபி-யின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியது என்று தாக்கினர்.

சர்ச்சை பெரிதான பிறகு, சில மணி நேரங்களில் அவர்  எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்டார்.

வெளிநாடுகளில் தேசத்தின் பெருமையைப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, தங்களுக்கு எதிரான கருத்துடையவர்களைச் சாடுவதும், மீண்டும் நாட்டுக்குள் வந்து “தேசபக்தி” பற்றி வகுப்பெடுப்பதும் ஒருவிதமான இரட்டை நிலைப்பாடு என்ற விமர்சனம் நீண்டகாலமாகவே முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவிற்குள் தங்களை விமர்சிப்பவர்களை “தேச விரோதிகள்” என்று முத்திரை குத்தும் போக்கு நிலவுகிறது. ஆனால், அதே அமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள அமைப்புகளுடன் உரையாடும்போது, இந்தியாவில் உள்ள பன்முகத்தன்மையை விடத் தங்களின் சித்தாந்தமே சிறந்தது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஜனநாயகம் மற்றும் பேச்சுரிமை

அமெரிக்கா போன்ற நாடுகளில் “பேச்சுரிமை” பற்றிப் பேசும் அதே வேளையில், இந்தியாவில் தங்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் ஊடகவியலாளர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் ஒடுக்கப்படுவதைப் பற்றி அவர்கள் மவுனம் காப்பது முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பிம்பமும், உள்நாட்டு யதார்த்தமும்!

வெளிநாடுகளில் “வசுதேவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்) என்று முழங்குபவர்கள், நாட்டிற்குள் மத ரீதியான அல்லது அரசியல் ரீதியான துருவப்படுத்துதலை  ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ஒரு முக்கியமான விமர்சனப் புள்ளியாக உள்ளது.

ஒரு நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தேசத்தின் நற்பெயரை உயர்த்துவது அவசியமானது. இருப்பினும், ஜனநாயக மதிப்பீடுகளையும் தேசபக்தியையும் வெறும் முழக்கமாக வைக்காமல், அவை நாட்டிற்குள்ளும் பாரபட்சமின்றிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வெளிநாட்டில் ஒரு பேச்சும், உள்நாட்டில் ஒரு செயலும் இருப்பது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

இதே பேச்சை ராகுல்காந்தியோ அல்லது எதிர்கட்சியினரோ பேசி இருந்தால் பாஜக இந்நேரம் நாடு முழுவதும் சாலையில் இறங்கி ‘தாம் தூம்’ என்று ஆட்டம் போட்டிருக்கும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *