முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் கொடுக்கப்பட வேண்டும் : லாலு பிரசாத்

viduthalai
1 Min Read

பாட்னா, மே 8- முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண் டும் என்று லாலுபிரசாத் கூறினார்.பீகார் சட்ட மேலவைக்கு முதல மைச்சர் நிதிஷ்குமார். மேனாள் முதலமைச்சர் ராப்ரிதேவி உன்பட 11 பேர் போட் டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று (7.5.2024) பதவி ஏற்றுக்கொண் டனர். தன் மனைவி ராப்ரிதேவி பதவி ஏற்பதை காண ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் சட்ட மேலவைக்கு வந்திருந்தார்.

பின்னர், அவர் மேலவை வளா கத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தார். ‘இந்தியா’ கூட்டணி, பிற்படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம் களுக்கு அளித்து விடும் என்று பிரதமர் மோடி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு லாலு கூறியதாவது:- முஸ்லிம்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது? அவர்களுக்கு நிச்சய மாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். பாஜனதா, அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இட ஒதுக் கீட்டுக்கு எதிரானது. எனவே, அரசமைப்புச் சட்டத்தை ரத்து செய்து, இடஒதுக்கீட்டுக்கும் முடிவுகட்ட விரும்பு கிறது. பீகாரில் நாங்கள் காட்டாட்சி நடத்தியதாக அமித்ஷா சொல்கிறார். காட்டாட்சி புரளியை எழுப்பி, பயத்தைத் தூண்ட பா.ஜனதா முயற்சிக்கிறது. 400 தொகுதிகளில் வெற்றி பெறப்போவதாக பிரதமர் மோடி சொல்வது பலிக்காது. அவர் வெளியேறப் போகிறார் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *