உ.பி.யில் பிஜேபியின் அராஜகம் இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் காவல்துறையினரும் விரட்டியடித்த கொடுமை!

viduthalai
1 Min Read

சம்பல், மே 8 உத்தரப் பிரதேசத் தில் வாக்களிக்க விடாமல் இஸ் லாமியர்கள் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தி யுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று 3ஆ-ம் கட்ட தேர்தல் 93 மக்களவைத் தொகுதி களுக்கு நடைபெற்றது. மக்கள் பெரும்பாலும் இந்தியா கூட் டணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாஜக பல தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. வாக்களிக்க விடாமல் இஸ்லா மியர்கள் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் – தொடுத்துள்ளனர்.

பிஜேபியினரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் காட்சி களை தொலைக்காட்சிகளிலும் பார்க்க முடிந்தது.
மோடி உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற் கொண்டு வருகின்றனர். இதனால் இஸ்லாமியர்களின் வாக்கு பாஜகவுக்கு எதிராக இருக்கிறது. எனவே இதனைத் தடுக்க பாஜகவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இஸ்லாமியர்கள் மீது பாஜக காவல்துறை தடியடி நடத்தியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிக மாக உள்ளனர். எனவே அங்கிருக் கும் அவர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்கு அப்பகுதி காவல் துறையினர் மறித்து தடுத்தனர். மேலும் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். அதோடு வாக் காளர்களின் வாக்கு அட்டை களைப் பறித்ததாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் இந்த நிகழ்வை
தட்டிக் கேட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஜியா உர் ரஹ்மானை காவல்துறையினர் தாக்கி அழைத் துச் சென்றுள்ளனர். பாஜக ஆளும் மாநிலத்தில் காவல்துறையினரின் இந்த செயல் தற்போது கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற அக்கிரமத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *