முதலமைச்சர் குறித்து அவதூறு மேனாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப் பதிவு

Viduthalai
1 Min Read

விழுப்புரம், செப்.10 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் 7ஆ-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், மேனாள் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக் குறைவாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழல்லி தொடரப்பட்டது இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்று சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *