பங்குச்சந்தை ஊழல் அதானி குழும நிறுவனங்களுக்கு செபி தாக்கீது

1 Min Read

மும்பை, மே 5- பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக அதானிகுழுமத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்களுக்கு செபி தாக்கீது அனுப்பியுள்ளது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் வரலாறு காணாத மோசடி செய்துள்ளதாகவும், பங்குகளின்விலையை அதிகரிக்க பல மோசடிகளை செய்ததாகவும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ஆய்வுநிறுவனம்அறிக்கை வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து, சிறப்பு விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதி மன்றம், அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனங் களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க செபிக்கு உத்தர விட்டிருந்தது. அதன் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த செபி, தற்போது பங்குச்சந்தைமுறைகேடு தொடர்பாக அதானி குழுமத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.
அதானிபோர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி பவர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பப் பட்டுள்ளது. முறையற்ற பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பங்குச் சந்தை விதிகளுக்கு இணங்காமல் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டது தொடர்பாக இந்த தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *