மாத ஊதியக்காரர்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுத்த பிஜேபி முயற்சி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப். 24- தலைமை தேர்தல் ஆணையருக்கு அகில இந்திய தொழில் நுட்ப காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஒரு புகார் மனு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 6ஆம் தேதி, அய்தராபாத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, சமூகத்தில் சமமான வளர்ச் சியை உறுதி செய்ய பொருளாதார, சமூக நீதிக்கு காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டிருப்பதாக ராகுல்காந்தி பேசினார்.

ஆனால் அந்த பேச்சை வேண்டும் என்றே திசை திருப்பி பிரச்சாரம் செய் யப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் சொத்துகளை பகிர்ந்து அளித்து விடும் என்று பா.ஜனதா பொய்ச் செய்தி பரப்பி வருகிறது.

மாத ஊதியக்காரர்க ளுக்கு ஒருவர் ‘வாட்ஸ் அப்’ மூலம் வதந்தி பரப்பி உள்ளார். அதில், ”பொது மக்களின் மூன்றில் இரண்டு பங்கு சொத்துகளை பறி முதல் செய்து, ஜவகர்லால் நேரு தேசிய சொத்து மறு பங்கீட்டு திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்பதாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள் ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பொய்ச்செய்தி அடிப்படையில் ஒரு முன்னணி நாளிதழில் கட்டுரையும் வெளியிடப் பட்டுள்ளது. இவையெல் லாம் இட்டுக்கட்டப் பட்ட வதந்தி, பொய். மாத ஊதியக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத் தினர் இடைய குழப்பம், பதற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, அவர்களை காங்கிரசுக்கு எதிராக வாக் களிக்க செய்ய முயற்சி நடக்கிறது. ஆகவே, பா.ஜனதா மீது தேர்தல் ஆணையம் உரிய நடவ டிக்கை எடுத்து, இத்த கைய வதந்தி பரப்பப்படு வதை நிறுத்த வேண்டும். மேலும், டில்லி காவல் துறையிலும் புகார் அளிக்க உள்ளோம். – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *