ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து – அதன் பின்னணி என்ன?

1 Min Read

செய்தியாளர்: ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது; அந்தத் தீ விபத்திற்கு ஏதாவது சதி செயலோ அல்லது உள்நோக்கமோ இருக்கும் என்கிற அய்யப்பாடு இருக்கிறதே?
தமிழர் தலைவர்: மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்தைத்தான் கேள்வியாக நீங்கள் கேட்டுள்ளீர்கள்.
பொதுவாகவே, ஒரு தேர்தல் நடக்கின்ற நேரத் தில்,அதுவும்ஆட்சிமாற்றம்ஏற்படும் என்கிறவலு வான செய்திகள் வந்துகொண்டிருக்கின்ற சூழ்நிலை யில், டில்லியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவல கத்தில், அதுவும் பாதுகாப்பு நிறைந்த ஓரிடத்தில், எப்படி தீப்பிடிக்கும் என்பது மிக முக்கியமான மில்லியன் டாலர் கேள்வியாகும்.
இன்னொரு செய்தியும், அந்த செய்தியோடு வந் திருப்பதை நான் ஊடகங்களில் கவனித்தேன்.

தீ விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும்!

அது என்னவென்றால், அந்தத் தீ விபத்தில் முக்கியமான தஸ்தாவேஜூகள் எரிந்திருக்க வாய்ப்பு உண்டு என்கிற ஒரு செய்தியும் வெளிவந்திருக்கிறது.
எனவே, இதுகுறித்து போதிய அளவில், சுதந்திர மான, தெளிவான விசாரணை செய்யப்படவேண்டும்.
உள்துறை என்பது இருக்கிறதே, அந்தத் துறை மிகப் பாதுகாப்போடு இயங்கக் கூடிய துறையாகும்.

ஏனென்றால், அண்டை நாடுகளுடைய பிரச்சி னைகள் மட்டுமல்ல, உள்நாட்டுப் பிரச்சினைகளிலும் முக்கிய பங்கு வகிப்பதாகும். அதுவும் மிக முக்கியமான காலகட்டத்தில், தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங் களே இருக்கக் கூடிய சூழ்நிலையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மூன்று நாள்கள். ஆனால், வட மாநிலங்களில் சில வாரங்கள்.
ஜனநாயகத் தீயினால் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை அணைப்பதற்காக – பாதுகாப்பதற்காக செய்திருக்கிறார்களோ?

ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்று சொல்லக்கூடிய சூழ்நிலை உருவாக்கி இருக்கின்ற பொழுது, திடீரென்று உள்துறை அமைச்சக அலுவல கத்தில் தீப்பிடிப்பது என்று சொல்வது – ஒருவேளை ஜனநாயகத் தீயினால் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை அணைப்பதற்காக – பாதுகாப்பதற்காக செய்திருக்கி றார்களோ என்கிற அய்யம் எழுகிறது.
இதற்கு முன்பும் இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நிகழ்ந்திருப்பதற்கான வரலாறும் உண்டு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *