சிதம்பரம், ஏப். 12 திராவிடர் கழக சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் குமாரக்குடியில் 10.4.2024 அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பஞ்சநாதன் வரவேற்றார். தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ இளந்திரையன் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் புவனகிரி யாழ்திலீபன், பொதுக்குழு உறுப்பினர் வலசக்காடு அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிடும் விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன் வெற்றிக்கு அயராது பாடுபடு வது என்றும், சிதம்பரம், காட்டுமன்னார் குடி, புவனகிரி சட்டமன்ற தொகுதிகளில் தீவிர பிரச்சாரப் பணியில் ஈடுபடுவது என்றும், ஏப்ரல் 13 அன்று தமிழர் தலை வர் ஆசிரியர் தலைமையில் திருமாவள வனை ஆதரித்து ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் சிதம் பரம் மாவட்டத் தோழர்கள் பெருமள வில் பங்கேற்பது என்றும், சிதம்பரம் கழக மாவட்டம் முழுவதும் கிளைக் கழக வாரியாக கலந்துரையாடல் கூட் டங்களை நடத்துவதென்றும், புதிய கிளைகளை உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட அமைப் பாளர் தென்னவன், வலசக்காடு கிளைக் கழகத் தலைவர் வீரமணி, தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், பாளையங்கோட்டை கிளை தலைவர் தமிழரசன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஜெயபால், காட்டுமன்னார் குடி ஒன்றிய அமைப்பாளர் சண்முக சுந்தரம், காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் முருகன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ணசாமி, பெரியார் பெருந்தொண்டர் சூசை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாவட்ட மகளிரணித் தலைவர் சுமதி நன்றி கூறினார்.